புத்தளம் கடற்பரப்பில் மீன்பிடிக்க சென்று காணாமல் போன மீனவர் ஒருவர் இன்று (10) மன்னார் சிலாவத்துறை சவேரியார் புரம்
கடற்கரையிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
புத்தளம் வத்தளங்குன்று பகுதியைச் சேர்ந்த ராமையா ஜேசுதாசன் வயது-(47) என்ற மீனவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிலாவத்துறை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற போது சடலம் ஒன்று கடலில் மிதப்பதைப் கண்ட நிலையில் கடற்படையினருக்கு தகவல் வழங்கினர்.
கடற்படையினர் மீனவர்களின் உதவியுடன் இன்று வெள்ளிக்கிழமை மதியம் குறித்த சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
புத்தளம் கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போதே இவர் காணாமல் போனமை குறிப்பிடத்தக்கது.